சொத்து மதிப்பு குறித்து பொய்: டிரம்ப்பிற்கு அபராதம்
சொத்து மதிப்பு குறித்து பொய்: டிரம்ப்பிற்கு அபராதம்
UPDATED : பிப் 17, 2024 01:02 PM
ADDED : பிப் 17, 2024 12:30 PM

வாஷிங்டன்: சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்கள் அளித்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு 355 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை டிரம்ப் தந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து சிவில் வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த சிவில் வழக்கு விசாரணை முடிவில், நீதிபதி 90 பக்க தீர்ப்பை வாசித்தார்.
டிரம்ப் மற்றும் டிரம்ப் அமைப்பு 355 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, அவரது நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட டிரம்ப்பிற்கு 3 ஆண்டுகள் தடை விதித்தார். அதேபோல், அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப்பும் 4 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தவும், நிறுவனங்களின் இயக்குநர்களாக செயல்பட இரண்டு ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.