ஈரான் பேச்சு நடத்த விரும்புகிறது; அதிபர் டிரம்ப் தகவல்
ஈரான் பேச்சு நடத்த விரும்புகிறது; அதிபர் டிரம்ப் தகவல்
ADDED : ஜன 12, 2026 08:47 AM

வாஷிங்டன்: அமெரிக்காவால் தாக்கப்பட்டதில் அவர்கள் சோர்வடைந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். ஈரான் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவும் சூழ்நிலை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: வரம்பு மீறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. கொல்லப்படக்கூடாத சில நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலைவர்களைப் பற்றிப் பேசினால், அவர்கள் தலைவர்களா அல்லது வன்முறை மூலம் ஆட்சி செய்பவர்களா என்று எனக்குத் தெரியவில்லை.
நாங்களும், ராணுவமும் இதை மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறோம். மேலும் நாங்கள் சில கடும் நடவடிக்கைகளை எடுக்க மாற்று வழிகளையும் பரிசீலித்து வருகிறோம். ஈரான் அமெரிக்காவைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்தது.
அமெரிக்காவால் தாக்கப்பட்டதில் அவர்கள் சோர்வடைந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். எனது நிர்வாகம் ஈரான் உடன் பேச்சு நடத்த ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து வருகிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானில் நாடு தழுவிய போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறையில் 544 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

