sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எங்கள் எல்லைகளை பாதுகாப்போம்; உறுதி அளித்தார் டொனால்டு டிரம்ப்!

/

எங்கள் எல்லைகளை பாதுகாப்போம்; உறுதி அளித்தார் டொனால்டு டிரம்ப்!

எங்கள் எல்லைகளை பாதுகாப்போம்; உறுதி அளித்தார் டொனால்டு டிரம்ப்!

எங்கள் எல்லைகளை பாதுகாப்போம்; உறுதி அளித்தார் டொனால்டு டிரம்ப்!

2


ADDED : ஜன 20, 2025 08:23 AM

Google News

ADDED : ஜன 20, 2025 08:23 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'எங்கள் எல்லைகளை பாதுகாப்போம். அனைத்து எல்லை அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன்' என இன்று (ஜன.,20) அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் உறுதி அளித்தார்.

அமெரிக்காவில், கடந்த நவ., 5ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், 78, வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் ஜனநாயக கட்சியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் தோற்கடித்தார். இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள 'கேபிடோல்' எனப்படும், அமெரிக்க பார்லி.,யின் உள்ளரங்க விழாவில், அமெரிக்காவின் 47வது அதிபராக, இன்று (ஜன.,20) பதவியேற்கிறார்.

அமெரிக்காவில் கடுங்குளிர் நிலவுவதால், 40 ஆண்டுகளுக்கு பின், பதவியேற்பு விழா முதன்முறையாக பார்லி., உள்ளே நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில், அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன், துணை அதிபர் பதவியில் இருந்து விலகும் கமலா ஹாரிஸ், உலகப் பணக்காரர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பர்க் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில், டிரம்ப் பேசியதாவது: எங்கள் எல்லைகள் மீதான படையெடுப்பை தடுத்து நிறுத்துவேன். எங்கள் எல்லைகளை பாதுகாப்போம். அனைத்து சட்டவிரோத எல்லை அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.

நாங்கள் எங்கள் செல்வத்தை மீட்டெடுக்கப் போகிறோம். அமெரிக்க மண்ணில் செயல்படும் ஒவ்வொரு சட்டவிரோத அன்னிய கும்பல் மற்றும் புலம்பெயர்ந்த குற்றவாளிகளையும் வெளியேற்றுவோம்.

மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கான முதல் படியாக நாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடைந்தோம். இந்த ஒப்பந்தம் நவம்பரில் நாங்கள் பெற்ற வரலாற்று வெற்றியின் விளைவாக மட்டுமே நடந்திருக்க முடியும். பிணைக்கைதிகள் 3 பேர் இப்போது விடுவிக்கப்பட்டனர். முதலில், நான் அதிபராக இருந்திருந்தால் காசா போர் நடந்திருக்காது.

நமது நிர்வாகம் மத்திய கிழக்கில் மூன்று மாதங்களுக்குள் இவை அனைத்தையும் சாதித்துள்ளது. அதிபராக இல்லாமல், நான்கு ஆண்டுகளில், பைடன் அதிபராக இருந்து சாதித்ததை விட அதிகமாக நாங்கள் சாதித்துள்ளோம். நான் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் குழப்பத்தை நிறுத்துவேன், 3வது உலகப் போர் நடக்காமல் தடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us