sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல்!

/

பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல்!

பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல்!

பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல்!

11


ADDED : ஜன 31, 2025 10:47 AM

Google News

ADDED : ஜன 31, 2025 10:47 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; இல்லை என்றால் 100% வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை தோற்றுவித்துள்ளன. இதில் புதிய நாடுகள் சிலவும் சமீபத்தில் இணைந்துள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்யேக கரன்சி உருவாக்கப் படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதில் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை செயல்படுத்த மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அவரது தடாலடி அறிக்கை:


சர்வதேச வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் யோசனையை, நாம் வேடிக்கை பார்த்த காலம் முடிந்து விட்டது.

இந்த நாடுகளிடம் ஒரு உறுதிமொழியை நாங்கள் கோரப் போகிறோம். அவை ஒரு புதிய பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க மாட்டேன் என்றும், வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்க மாட்டேன் என்றும் உறுதியளிக்க வேண்டும். இல்லையெனில், அவை 100% வரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பையும் இழக்க வேண்டி இருக்கும். அவை வேறு எந்த முட்டாள் நாட்டைத் தேடிச் செல்லலாம். அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த கரன்சியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.அப்படி முயற்சிக்கும் எந்த நாடும் வரிகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை, பிரிக்ஸ் நாடுகளுக்கு நேரடியாக விடப்பட்டுள்ள மிரட்டல் என்று கருதப்படுகிறது. இதே போன்றதொரு அறிக்கையை பதவியேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பும் அவர் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us