உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 24, 2026 03:50 AM

அ நிறம் | அளவு
அங்காரா: மேற்காசிய நாடான துருக்கியில், சமீபத்தில் 14 வயது சிறுவன் ஒருவன், தன் பள்ளியில் புகுந்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் உட்பட 10 பேரை சுட்டுக் கொன்றான்.
விசாரணையில், அந்தச் சிறுவன் சமூக ஊடகங்களில் வன்முறையைத் துாண்டும் வீடியோக்களை பார்த்து வந்தது தெரியவந்தது.
இந்தநிலையில், அந்நாட்டில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதா நேற்றுமுன்தினம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
