எப்படியாச்சும் கலவரத்தை தடுத்து நிறுத்தியாகணும்: விடுமுறையை ரத்து செய்தார் பிரதமர் ஸ்டாமர்
எப்படியாச்சும் கலவரத்தை தடுத்து நிறுத்தியாகணும்: விடுமுறையை ரத்து செய்தார் பிரதமர் ஸ்டாமர்
UPDATED : ஆக 11, 2024 10:42 AM
ADDED : ஆக 11, 2024 10:25 AM

லண்டன்: புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை தடுப்பதில், கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தமக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ரத்து செய்துள்ளார்.
பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில், சமீபத்தில் புகுந்த 17 வயது சிறுவன், அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் படுகாயமடைந்த 3 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய சிறுவன், சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது.
கலவரங்கள்
தாக்குதலை கண்டித்தும், பிரிட்டன் குடியேற்ற விதிகளுக்கு எதிராகவும் அங்குள்ள மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின.
லீவு வேண்டாம்
இந் நிலையில் அண்மையில் பிரிட்டன் புதிய பிரதமராக பதவியேற்ற கேர் ஸ்டாமருக்கு இந்த போராட்டங்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளது. புலம் பெயர்ந்தோருக்கு எதிரான இனக்கலவரங்களை தடுப்பதில், கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
தகவல்
இதையடுத்து தமக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள விடுமுறையை பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ரத்து செய்துள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

