sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்

/

 அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்

 அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்

 அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்


ADDED : நவ 19, 2025 07:35 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: காசா போரை முடிவுக் கு கொண்டு வர அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி திட்டத்தித்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பா ட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் அமெரிக்காவின் 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நி லையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த அமைதி திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கக் கோரியும், காசாவில் அமைதி பணியை மேற்கொள்ள சர்வதேச கூட்டுப் படைக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்தும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது.

இத்தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடந்தது. மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 13 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். சீனா மற்றும் ரஷ்யா பங்கேற்கவில்லை. இதையடுத்து, அமெரிக்காவின் வரைவு தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

ஹமாஸ் புகார்! இது குறித்து ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அமைதிக்கான நிர்வாகக்குழு உள்ளிட்ட புதிய ஆளும் கட்டமைப்பு பாலஸ்தீன மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. மேலும், ஹமாஸ் தங்கள் படையை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது. எதிர்ப்பு குழுக்களை நிராயுதபாணியாக்க சர்வதேச படைக்கு அதிகாரம் அளிப்பது அதன் நடுநிலைமையை இழக்க செய்வதாக உள்ளது. மேலும் இத்தீர்மானம் பாலஸ்தீன மக்களின் முழுமையான அரசியல் மற்றும் மனிதாபிமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் போதுமான அளவில் கவனிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



டிரம்ப் வரவேற்பு! தீர்மானம் வெற்றி பெற்றது குறித்து டிரம்ப் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்புக்கு நம்பமுடியாத அளவில் ஆதரவு வழங்கியமைக்காக உலகிற்கு நன்றி. மேலும் இது உலகெங்கிலும் அமைதி ஏற்பட வழிவகுக்கும். ஐ.நா., சபையின் வரலாற்றில் மிகப்பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாகவும், உண்மையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகவும் இது பதிவாகும். காசாவின் அமைதிக்கான நிர்வாகக்குழுவை அங்கீகரித்ததற்கு நன்றி. இந்த குழுவுக்கு நானே தலைமை தாங்குவேன். உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்கள் இதில் இடம் பெறுவர். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குறித்தும், மற்றும் பல அற்புதமான அறிவிப்புகளும் வரும் வாரங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் • டிரம்பின் 20 அம்ச திட்டம், இத்தீர்மானத்தின் ஒரு இணைப்பாக சேர்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு உள்ளது • காசாவின் இடைக்கால நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதிக்கான நிர்வாக குழு அமைக்கவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது • காசாவில் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஹமாஸ் உள்ளிட்ட ஆயுத குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கு தேவையான ஒரு சர்வதேச படைக்கு, இத்தீர்மானம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us