சிறுவன் செய்த படுபாதகம்; 4 பேர் சுட்டுக்கொலை; அமெரிக்காவில் துயரம்!
சிறுவன் செய்த படுபாதகம்; 4 பேர் சுட்டுக்கொலை; அமெரிக்காவில் துயரம்!
UPDATED : செப் 05, 2024 07:13 AM
ADDED : செப் 05, 2024 06:46 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநில பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 14 வயது மாணவன் என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 ஆசிரியர்கள் பலி
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், 4 பேரின் உயிரை பறித்தவர், 14 வயது மாணவர் என்றும், கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர் சக மாணவர்கள், இருவர் ஆசிரியர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.