sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!

/

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!

3


ADDED : மே 03, 2025 06:12 PM

Google News

ADDED : மே 03, 2025 06:12 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறி, ஆறுகளின் தண்ணீரை தேக்கவோ, திசை திருப்பவோ அணை உள்ளிட்ட கட்டுமானங்களை இந்தியா கட்டினால் அதை இடிப்போம் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசீப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலுக்கு உடனடி பதிலடியாக, பாகிஸ்தான் உடனான உறவை முறிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தது. அதில் முக்கியமானது சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது. சிந்து நதிநீரை நிறுத்துவதால் மின்சாரம், உணவு உற்பத்தி பெருமளவு, பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது.

சிந்து நதிநீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசீப் இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் புதிதாக மிரட்டல் விடுத்துள்ளார்.அவர் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டி:

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறி, ஆறுகளின் தண்ணீரை தேக்கவோ, திசை திருப்பவோ அணை உள்ளிட்ட கட்டுமானங்களை இந்தியா கட்டினால் அது பாகிஸ்தான் மீதான தாக்குதல் என்றுதான் கருதப்படும். சிந்து நதிநீரை தடுக்க இந்தியா கட்டுமானங்களை கட்டினால் அதை எங்கள் ராணுவம் தகர்க்கும்.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; அது பாகிஸ்தானுக்கு எதிரான போர் அறிவிப்பாக இருக்கும். பீரங்கிகள் துப்பாக்கியால் சுடுவது மட்டும் தாக்குதல் அல்ல. பல வகையில் தாக்குதல் நடத்தலாம். நதிநீர் ஒப்பந்ததை மீறுவதும் அதில் ஒன்று. இதன் காரணமாக மக்கள் பசியாலும் தாகத்தாலும் மடிந்து போவார்கள் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசீப் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us