sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி

/

பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி

6


ADDED : ஜூன் 07, 2025 10:52 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 10:52 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா பயங்கர தாக்குதலை நடத்தியது. இதன் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு இந்திய எம்.பி.,க்கள் குழு நேரில் சென்று விளக்கம் அளித்தது.

அமெரிக்காவிற்கு சென்ற இந்திய குழுவிடம், ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என அந்நாட்டு வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் பார்லிமென்ட் குழுவினரிடம் இந்தியாவின் நிலைப்பாட்டை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு விளக்கம் அளித்தது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதம் நடந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க வேண்டும் என இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us