உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 26, 2024 08:29 PM

அ நிறம் | அளவு
அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.,) பணிகளை பாராட்டும் வகையில், அவை நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தி பிப். 27ல் உலக தொண்டு நிறுவன தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 89 நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, கல்வி, குழந்தைகள் நலன், சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் தொண்டு
நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இது தவிர போர் பாதிப்பு, தொற்றுநோய் காலங்களில் இதன் பணி மகத்தானது. உலகளவில் 1 கோடி என்.ஜி.ஓ., க்களும், இந்தியாவில் 30 லட்சம் என்.ஜி.ஓ., க்களும் செயல்படுகின்றன.
