sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கனடாவில் ஹிந்து கோவிலில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

/

கனடாவில் ஹிந்து கோவிலில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

கனடாவில் ஹிந்து கோவிலில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

கனடாவில் ஹிந்து கோவிலில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

12


UPDATED : நவ 04, 2024 08:18 PM

ADDED : நவ 04, 2024 06:21 PM

Google News

UPDATED : நவ 04, 2024 08:18 PM ADDED : நவ 04, 2024 06:21 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கனடாவில் ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரம்ப்டன் நகரில் ஹிந்து கோவில் உள்ளது. இப்பகுதியில் இந்திய தூதரக அதிகாரிகள் முகாம் அலுவலகம் அமைத்து இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கோவிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கையில் இருந்த கொடிக்கம்பத்தை வைத்தும் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இந்த வன்முறையை அரங்கேற்றி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய சம்பவம். இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வேண்டும் என கனடா அரசை வலியுறுத்துகிறோம். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு கவலை உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கோழைத்தனமானது

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், கனடாவில் ஹிந்து கோவிலில் நடந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். நமது தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒரு போதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசு நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம் எனக்கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us