/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
/
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
ஆக 11, 2024

புதுடில்லி : சரோஜினி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் திருக்கோயிலில் மஹன்யாஸ பாராயணம் மற்றும் ஏகாதச ருத்ர ஜபம் மிகவும் விமரிசையாக நடந்தது. கே.வி. பரசுராம சாஸ்திரிகள் தலைமையில், ஐம்பதிற்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர்.
காலை 8.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம் மற்றும் கலச ஸ்தாபனம் நடைபெற்றது.
9.00 மணிக்கு மஹன்யாஸ பாராயணம், அதைத் தொடர்ந்து 11 ஆவர்த்தி ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம், ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத ஸ்ரீ கற்பக விநாயகர், மற்றும் ஓங்காரேஸ்வருக்கு அபிஷேகம், நாமார்ச்சனை, உபசார பூஜைகள் மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றன.
12.30 மணிக்கு, ஸ்ரீ கற்பக விநாயகர், அனுமன், நவகிரஹ சன்னதிகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
லட்சார்ச்சனை : வரவிருக்கும் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, ஆகஸ்ட் 27ம் தேதி வரையிலும், தினமும் காலை மற்றும் மாலையில் மூலவர் கற்பக விநாயகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று வருகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்