sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆராதனை தினம்

/

பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆராதனை தினம்

பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆராதனை தினம்

பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆராதனை தினம்


ஏப் 15, 2025

ஏப் 15, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுதில்லி: பகவான் ரமண மகரிஷியின் 75வது ஆராதனை லோதி சாலையில் உள்ள ரமண கேந்திராவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாலை 5.00 மணிக்கு, குரு வந்தனம், கணபதி பூஜை மற்றும் ஸ்வஸ்தி வசனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து, கலச ஸ்தாபனம், ருத்ர நமகம், சமகம், ஸ்ரீ ரமண அஷ்டோத்திர பூஜை , மற்றும் தைத்திரீய உபநிடதம் பாராயணம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, எம்.எஸ்.ஜெயந்தி ஐயர் மற்றும் குழுவினர் ரமண பாத பஞ்சரத்னத்தை இசை வழியில் வழங்கினர். ஜி. ராகவேந்திரா பிரசாத் (வயலின்) மற்றும் அச்சுதன் (மிருதங்கம்) பக்க வாத்தியம் வாசித்தனர்.

திருவண்ணாமலையில் தங்கி, பல லட்சம் பக்தர்களின் வாழ்வில் ஆன்மிக விளக்கை ஏற்றிவைத்த ஸ்ரீ ரமண மகரிஷி இயற்கையோடு கலந்த தினத்தன்று. (இரவு 8.47 மணி). இத்தருணத்தில், ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பக்தர்கள் அக்ஷர மணமாலை பாடி கோஷமிட்டனர். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 75வது ஆராதனையை (மகா நிர்வாண தினம்) அனுசரிக்கும் அனைத்து பக்தர்களும் இதில் கலந்து கொண்டனர். பிறகு ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தம்மைக் கண்டறிவதற்காகத் தனக்குள்ளேயே ஆழ்ந்து வருபவனே தனக்குப் பிரியமானவன் என்று பகவான் கூறியுள்ளார். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் உண்மையான பக்தராக இருக்க முயற்சிப்போம், அவரில் நிலைத்திருப்போம்.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us