sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா 132வது அனுஷம் ஜெயந்தி

/

ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா 132வது அனுஷம் ஜெயந்தி

ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா 132வது அனுஷம் ஜெயந்தி

ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா 132வது அனுஷம் ஜெயந்தி


ஜூன் 11, 2025

ஜூன் 11, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுதில்லி அருணா அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரின் 132வது அனுஷம் ஜெயந்தி இன்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், மஹன்யாஸ பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. குரு சந்திரசேகரன் தலைமையில், ரித்விக்குகள் திரளாக பங்கேற்று ருத்ர ஜபம் பாராயணம் செய்தனர்.


கோவிலில் அமைந்துள்ள ஆதிசங்கரர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தோடகாஷ்டகம் சொல்லி நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். மகா பெரியவரின் ஆன்மிக பங்களிப்பு குறித்து கோவில் நிர்வாகி பொள்ளாச்சி கணேசன் பேசினார்.


மாலை உபநிஷத் வேத பாராயணம், பாதுகை பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ மஹா பெரியவர் திருவுருவப் படத்துடன் மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலம் நடந்தது.


உம்மாச்சி தாத்தா என்று செல்லமாக குழந்தைகளாலும் மஹா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியானஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132வது அவதார ஜெயந்தி தினம் மஹா பெரியவர் பக்தர்களால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us