பெங்.,கில் 3 நாட்கள் நடக்கும் 'பிக்கில்பால்' போட்டி துவக்கம்
பெங்.,கில் 3 நாட்கள் நடக்கும் 'பிக்கில்பால்' போட்டி துவக்கம்
ADDED : நவ 14, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரில் மூன்று நாட்கள் நடக்கும் பிக்கில்பால் போட்டிகள் நேற்று துவங்கின.
மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் அனுமதியுடன், பெங்களூரில் 3 நாட்கள் நடக்கும் பிக்கில்பால் போட்டி நேற்று துவங்கின.
கனகபுரா ரோடு வட்டரஹள்ளியில் உள்ள, விளையாட்டு மைதானத்தில் துவங்கிய போட்டியை, இந்திய பிக்கில்பால் சங்க தலைவர் சூர்யவீர் சிங், கர்நாடக பிக்கில்பால் சங்க தலைவர் ஹர்ஷா, கர்நாடக மல்யுத்த சங்க தலைவர் குணரஞ்சன் ஷெட்டி, பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ், அர்ஜுனா விருது பெற்ற நீச்சல் வீராங்கனை நிஷா மில்லத் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த 12 முதல் 70 வயதுக்கு உட்பட்ட 900 வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.

