sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

கே.பி.எல்., போட்டிகள் ரசிகர்களுக்கு தடையா?

/

கே.பி.எல்., போட்டிகள் ரசிகர்களுக்கு தடையா?

கே.பி.எல்., போட்டிகள் ரசிகர்களுக்கு தடையா?

கே.பி.எல்., போட்டிகள் ரசிகர்களுக்கு தடையா?


ADDED : ஜூலை 04, 2025 05:24 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் கிராம பகுதிகளில் வசிக்கும் கிரிக்கெட் வீரர்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் டி.என்.பி.எல்., 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுபோல கர்நாடகாவில் கிராம பகுதிகளில் வசிக்கும், திறமையான கிரிக்கெட் வீரர்களை வெளி உலகிற்கு அடையாளம் காணும் வகையில் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் கே.பி.எல்., எனும் கர்நாடக பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், கடந்த 2022 ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

குல்பர்கா மைஸ்டிஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ், மங்களூரு டிராகன்ஸ், மைசூரு வாரியர்ஸ், ஷிவமொக்கா லயன்ஸ் என்று ஆறு அணிகள் விளையாடுகின்றன.

வீரர்கள் ஏலம்


இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் துவங்க உள்ளது. வரும் 15ம் தேதி அணிகளுக்கு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளியில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அனைத்து போட்டிகளும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மட்டுமே நடத்த வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கே.பி.எல்., 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்துவது தொடர்பாக, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அசோசியேஷன் தலைவர் ரகுராம் பட் தலைமை வகித்தார். அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் அனுமதி


ஆலோசனை கூட்டத்தில் நடந்த விவாதத்தில், ஆர்.சி.பி., அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது, சின்னசாமி மைதானம் முன்பு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சோக சுவடு இன்னும் மறையவில்லை. இந்த நேரத்தில் கே.பி.எல்., போட்டிகளை நடத்த வேண்டுமா என்று யோசித்தாலும், கிராம பகுதிகளில் வசிக்கும் திறமையான கிரிக்கெட் வீரர்களை, வெளி உலகிற்கு கொண்டு வருவது அவசியமாக உள்ளது.

மைசூரு, ஹூப்பள்ளியில் அடுத்த மாதம் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து போட்டிகளையும், சின்னசாமி மைதானத்தில் நடத்தலாம். ஆனால் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம். ஒருவேளை ரசிகர்களை அனுமதிக்க நினைத்தால், குறைந்த அளவில் ரசிகர்களுக்கு, டிக்கெட் வினியோகம் செய்தால் போதும். இதற்கும் போலீஸ் துறையிடம் அனுமதி கேட்போம். அனுமதி கிடைக்காவிட்டால், ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று, ஒருமனதாக முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us