sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

மாற்றுத்திறனாளி மகனுக்காக மாரத்தான் ஓடும் தந்தை

/

மாற்றுத்திறனாளி மகனுக்காக மாரத்தான் ஓடும் தந்தை

மாற்றுத்திறனாளி மகனுக்காக மாரத்தான் ஓடும் தந்தை

மாற்றுத்திறனாளி மகனுக்காக மாரத்தான் ஓடும் தந்தை


ADDED : அக் 30, 2025 11:04 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயது அதிகமானால், உடலில் சக்தி குறையும் என்பதால், பலரும் உடலை வருத்திக்கொள்ளும் பணிகளை செய்ய தயங்குவர். ஆனால் வயது என்பது வெறும் எண்ணிக்கை தான்; மனதுக்கு அல்ல என்பதை, 68 வயது ஆட்டோ ஓட்டுநர் நிரூபித்துள்ளார்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் வசிப்பவர் மாதவ் சரிபள்ளா, 68; ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் தன்ராஜ் சரிபள்ளா, 25. இவர் மாற்றுத்திறனாளி; ஸ்கேட்டிங்கில் சிறந்து விளங்கினார்; பல பதக்கங்கள் பெற்றவர். ஆனால் சீனாவில் நடந்த போட்டியில் பங்கேற்றபோது, கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அன்று முதல் விளையாட்டை கைவிட்டார். விளையாட்டில் மகன் பல சாதனைகள் செய்வார் என, ஆசைப்பட்ட மாதவ் சரிபள்ளா, மகனின் நிலையை பார்த்து வருந்தினாலும், மனம் தளரவில்லை. மகனின் பெயரில் தானே ஓட துவங்கினார்.

முதன்முறை கடந்த 14 ஆண்டுகளில், கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் நடந்த 100க்கும் மேற்பட்ட மாரத்தான்களில் பங்கேற்றுள்ளார். 2011ல் மங்களூரின் எடபதவியில் நடந்த மாரத்தானில், முதன் முறையாக பங்கேற்று ஓடினார்.

தற்போது 'மங்களூரு மாரத்தான் - 2025'க்கு, தன்னை தயார்படுத்துகிறார். நவம்பர் 9ம் தேதியன்று, 32 கி.மீ., துார மாரத்தானில் ஓட பயிற்சி பெறுகிறார்.

68 வயதானாலும், இளைஞர்களே வெட்கப்படும் அளவுக்கு, ஓட்டத்தில் பங்கேற்கிறார். மாதவ் சரிபள்ளாவின் வாழ்க்கை பயணம் சுகமானது அல்ல. இவரது மகள் நந்தினியும் கூட, மாற்றுத்திறனாளி.

2018ல் இவரது திருமணத்துக்காக, மாதவ் தன் ஆட்டோவை விற்க வேண்டி வந்தது. 2007ல் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்தது. 2017ல் தானமாக கிடைத்த பணத்தில், வீட்டை சரி செய்து கொண்டார்.

இப்போது எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டி, தினமும் 800 ரூபாய் சம்பாதிக்கிறார். அவரது மகன் தன்ராஜுக்கு 'ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில், அரசு அலுவலகத்தில் உதவியாளர் வேலை கிடைத்துள்ளது.

உதவிகள் மாதவ், மாரத்தானில் பங்கேற்க தேவையான பணம் உட்பட மற்ற உதவிகளை யெனபோயா மருத்துவமனை டாக்டர் அனுபமா ராவும், ஏ.ஜே.மருத்துவமனையின் பேராசிரியர் ராகவேந்திர ராமும் செய்கின்றனர்.

மாதவ் கூறியதாவது:

என் மகன் தன்ராஜ் மாற்றுத்திறனாளி. இவர் சீனாவில் விளையாட்டில் பங்கேற்றபோது, கையில் அடிபட்டது. அவரால் விளையாட்டில் முடியாமல் போனது. அவருக்கு பதிலாக நான் ஓட துவங்கினேன். இப்போது என் ஆரோக்கியமும் நன்றாக உள்ளது. மனதுக்கும் நிம்மதி கிடைக்கிறது.

நவம்பரில், 32 கி.மீ., துார மாரத்தான் நடக்கவுள்ளது. அதில் நானும் பங்கேற்கிறேன். இதற்காக பயிற்சி பெறுகிறேன். தினமும் 25 கி.மீ., ஓடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் - .






      Dinamalar
      Follow us