sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

ஆடுகளம் அறிவிப்பு கட்டுரை

/

ஆடுகளம் அறிவிப்பு கட்டுரை

ஆடுகளம் அறிவிப்பு கட்டுரை

ஆடுகளம் அறிவிப்பு கட்டுரை


ADDED : ஆக 08, 2025 04:16 AM

Google News

ADDED : ஆக 08, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு பள்ளியில் எத்தனையோ மாணவர்கள் வருவர், செல்வர். ஆனால் இவர்களில் நினைவில் நிரந்தரமாக தங்குவது சிலர் மட்டுமே. இந்த வரிசையில் சேர்ந்துள்ளவர் அஜித். இவர் தற்போது உயிருடன் இல்லை. ஆனால் இவரை பள்ளி இப்போதும் மறக்கவில்லை. அவரை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும் கராத்தே போட்டிகள் நடத்துகிறது.

மைசூரு நகரின், சரஸ்வதி புரத்தில் மஹாபோதி பள்ளி உள்ளது. இப்பள்ளி மிகவும் பிரபலமானது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள், இந்த பள்ளிக்கு வந்து கல்வி கற்கின்றனர். பள்ளியில் கராத்தே உட்பட, பல்வேறு கலைகளும் கற்றுத்தரப்படுகின்றன. விடுதி வசதியும் உள்ளது.

இதே பள்ளியில் அஜித் என்ற மாணவர் படித்து வந்தார். இவர் கராத்தே மட்டுமின்றி, அனைத்து விளையாட்டுகளிலும் திறன் மிக்கவர்.

பள்ளி சார்பில் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றுள்ளார். இவரால் பள்ளிக்கு பெருமை கிடைத்தது. ஆனால் எதிர்பாராவிதமாக அவர் அகால மரணம் அடைந்தார்.

இதனால் பள்ளி நிர்வாகமும், நண்பர்களும் அடைந்த வருத்தத்துக்கு அளவே இல்லை. அவர் இறந்து 15 ஆண்டுகளாகியும், பள்ளி அந்த மாணவரை மறக்கவில்லை. அவரை நினைவு கூரும் வகையில், அவரது பெயரில் ஆண்டு தோறும் கராத்தே போட்டி நடத்துகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்குகிறது.

கல்வியில், விளையாட்டுகளில் சாதனை செய்தாலும், மாணவர்களை பள்ளிகள் நினைவுகூர்வது அபூர்வம். தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர் இறந்து, 15 ஆண்டுகளாகியும் அவரை மறக்காததுடன், அவரை நினைவு கூரும்ம் வகையில், கராத்தே போட்டி நடத்துவதன் மூலம், மஹாபோதி பள்ளி முன் உதாரணமாக விளங்குகிறது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us