sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/ஆடுகளம்/ பீமகோலா தடுப்பணையில் தண்ணீர் சாகச விளையாட்டு

பீமகோலா தடுப்பணையில் தண்ணீர் சாகச விளையாட்டு

பீமகோலா தடுப்பணையில் தண்ணீர் சாகச விளையாட்டு


ADDED : ஏப் 18, 2025 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 07:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மலைகளுக்கு நடுவே பாயும் சுத்தமான தண்ணீர், அதன் அருகே அழகான பூங்காவுடன் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் பீமகோலா தடுப்பணையில், நீர் சாகச விளையாட்டுகளை துவக்க சுற்றுலாத்துறை தயாராகி வருகிறது.

உத்தரகன்னடா மாவட்டம், கார்வார் தாலுகாவின் ஹனகோனா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, ஹோடெகாலி கிராமத்தில் பீமகோலா தடுப்பணை உள்ளது. ஹொடெகாலி, ஹனகோனா கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் நோக்கில் பீமகோலா ஏரியை ஒட்டி தடுப்பணை கட்டப்பட்டது. அதை சரியாக நிர்வகிக்காத காரணத்தால், நீர் அசுத்தமடைந்து பயன்படுத்த முடியாமல் போனது.

அம்ருத் சரோவர்


இதை பார்த்த மாவட்ட பஞ்சாயத்து, 'அம்ருத் சரோவர்' திட்டத்தின் கீழ், ஏரி நீரை சுத்திகரித்து அணையில் தேக்கியது. சில நாட்களாக மழை பெய்ததால், ஏரியில் இருந்து பெருமளவில் தண்ணீர் அணைக்கு பாய்ந்து வந்துள்ளது. அணை அருகிலேயே அழகான பூங்கா உருவாக்கப்பட்டது. தற்போது இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அணை பகுதியில் நீர் சாகச விளையாட்டுகளை ஏற்பாடு செய்ய சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் பணிகளை துவக்க தயாராகிறது.

இது குறித்து சுற்றுலாத்துறை துணை இயக்குனர் மஞ்சுநாத் நாவி கூறியதாவது:

பீமகோலா தடுப்பணையை சீரமைத்து, பூங்கா உருவாக்கிய பின், சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். இவர்களை குஷிப்படுத்த தண்ணீரில் சாகச விளையாட்டுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். பீமகோலா ஏரி 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. ஏரியில் சாகச விளையாட்டுகள் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது அதற்கான திட்டங்கள் வகுக்கிறோம்.

மே 2வது வாரம்


இதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் ஆய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளனர். அணையில் பெடல் போட்டிங், கயாகிங் உட்பட பல விதமான சாகச விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்படும். மே மாதம் இரண்டாம் வாரம் விளையாட்டுகள் துவங்கும்.

மழைக்காலம் துவங்கிய பின், வல்லுநர் குழுவினர் மீண்டும் ஆய்வு செய்வர். அப்போது கூடுதல் தண்ணீர் சாகச விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்படும். பீமகோலா அணையில் தண்ணீர் சாகச விளையாட்டுகளை துவங்கிய பின், முண்டகோடா தாலுகாவின், பாச்சனகி அணை, சித்தாபுரா தாலுகாவின், ஹோசூர் அருகில் உள்ள நிப்லி நீர் வீழ்ச்சியிலும் சாகச விளையாட்டுகளை துவக்க திட்டமிட்டுள்ளோம்.

வல்லுநர் குழுவின் சிபாரிசு படி, தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்து கொண்டு, சாகச விளையாட்டுகள் நடத்தப்படும். இது சாகச விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்

. - நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us