sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

அழகு

/

மூக்கின் மேல் கரும்புள்ளியா?- கையிலேயே இருக்கு தீர்வு..!

/

மூக்கின் மேல் கரும்புள்ளியா?- கையிலேயே இருக்கு தீர்வு..!

மூக்கின் மேல் கரும்புள்ளியா?- கையிலேயே இருக்கு தீர்வு..!

மூக்கின் மேல் கரும்புள்ளியா?- கையிலேயே இருக்கு தீர்வு..!


UPDATED : ஆக 27, 2023 01:04 PM

ADDED : ஆக 27, 2023 12:50 PM

Google News

UPDATED : ஆக 27, 2023 01:04 PM ADDED : ஆக 27, 2023 12:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளம் தலைமுறையினர் பலரும் சரும பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் மூக்கின் மேல் பகுதியில் கரும்புள்ளி, சொரசொரப்பு தன்மை வருகிறது. இவை சருமத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமத்தை கொண்டவர்கள் தான் அதிகம் எதிர்கொள்ளக் கூடும். இதற்குக் காரணம் சருமத்துளைகளில் இருந்து வெளிவரும் எண்ணெயானது வெளியேறாமல் அடைபடும் போது, சருமத்தின் மென்மை தன்மையைத் தடுத்து கரும்புள்ளி உருவாகக் காரணமாகிறது.

இந்த பிரச்னையை போக்க பலரும் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் பலன் கிடைக்கவில்லை என புலம்பி வரும் நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நிரந்தர தீர்வு காணலாம்.

உருளைக்கிழங்கு


Image 1161216

உருளைக்கிழங்கை வட்டவடிவில் நறுக்கி அதை மூக்கின் மேல் பகுதியில் சிறிது நேரம் மஜாஜ் செய்வது போல் தேய்த்து, பின்னர் தண்ணீரால் முகத்தைக் கழுவி வந்தால் கரும்புள்ளி மற்றும் சொரசொரப்பு தன்மை மறையும்.

தேன்


Image 1161213

தேனை லேசாகச் சூடு செய்து அதனுடன் வெள்ளைச் சர்க்கரையைக் கலந்து மூக்கின் மேல் பகுதியில் சிறிது நேரம் மஜாஜ் செய்து, தண்ணீரால் கழுவினால் கரும்புள்ளி மற்றும் சொரசொரப்பு தன்மை நீங்கும்.

இலவங்கப்பட்டை


Image 1161214

இலவங்கப்பட்டை பொடியுடன் தேன் கலந்து மூக்கின் மேல் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

தக்காளி


Image 1161215

தக்காளியை கூழாா அரைத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி பின்னர் தண்ணீரைக் கொண்டு கழுவினால் எண்ணெய் பசை நீங்குவதோடு கரும்புள்ளியும் மறையும்.

கடலை மாவு

Image 1161217
கடலை மாவுடன் பாதாம் பருப்பைப் பொடி செய்து சேர்த்து பசையாக மாற்றி முகத்தில் தடவி சிறிது நேரம் உலர்ந்த பிறகு தண்ணீர் கொண்டு கழுவினால் கரும்புள்ளிகள் முற்றிலுமாக மறையும்.

கருப்பு காராமணி


Image 1161212

கருப்பு காராமணியைத் தண்ணீர் சேர்த்து பசை போல் அரைத்து, அதை மூக்கின் மேல் பகுதியில் தடவி, பின்னர் தண்ணீரால் கழுவினால் கரும்புள்ளி மறையும்.






      Dinamalar
      Follow us