தனுஷ்கோடி கடற்கரை
தமிழகத்தின் கைவிடப்பட்ட கடற்கரை நகரமான தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ளது. இதன் பெயரைப் போன்றே தமிழகம் அல்லது இந்தியாவின் கடைக்கோடியில் உள்ளது. இது 1964ம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளிப் புயலால் அழிந்த நிலையில், இன்று பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாக உள்ளது. புயலின் அடையாளமாக சிதிலமடைந்த தேவாலயமும், இன்னும் சில கட்டடங்களின் மீதியும் இங்கு எஞ்சியுள்ளன. மிகவும் பிரபலமான சுற்றுலா தலமான இந்த தனுஷ்கோடி கடற்கரைக்கு, உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.