sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

 ஜன்னல் வெறும் அலங்கார கூறு அல்ல

/

 ஜன்னல் வெறும் அலங்கார கூறு அல்ல

 ஜன்னல் வெறும் அலங்கார கூறு அல்ல

 ஜன்னல் வெறும் அலங்கார கூறு அல்ல


UPDATED : டிச 27, 2025 08:46 AM

ADDED : டிச 27, 2025 05:24 AM

Google News

UPDATED : டிச 27, 2025 08:46 AM ADDED : டிச 27, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு வீட்டின் அழகையும், பயன்பாட்டையும் முதலில் வெளிப்படுத்துவது அதன் ஜன்னல்களும், வாசல்களும்தான். இவை வெறும் அலங்காரக் கூறுகள் அல்ல; வீட்டின் இயற்கை வெளிச்சம், காற்றோட்டம், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் முக்கிய கட்டுமான கூறுகள்.

பல வீடுகளில் ஜன்னல், வாசல்களின் இடம் மற்றும் அளவு கட்டுமானத்தின் கடைசி கட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. இதன் விளைவாக வெளிச்சம் குறைவு, காற்றோட்டம் இல்லாமை மற்றும் வெளியில் இருந்து நேரடிப்பார்வை போன்ற சிக்கல்கள் உருவாகின்றன.

கோவை மண்டல கட்டட பொறியாளர்(கொஜினா) சங்க செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் கூறியதாவது:

தவறான இடத்தில் அமைக்கப்பட்ட ஜன்னல்களால் வெளிச்சம் என்பது கேள்விக்குறியாகிறது. ஜன்னல்கள் மற்றும் வாசல்களை சுவர்களின் நடுப்பகுதியில் மட்டும் அல்ல; அறையின் பயன்பாடு மற்றும் கட்டடத்தின் திசை அடிப்படையில் திட்டமிட வேண்டும்.

சமையலறை, படுக்கையறை, கழிவறை போன்ற இடங்களில் ஜன்னல்களின் உயரம் மற்றும் திசை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிரெதிராக அமைக்கப்படும் ஜன்னல்கள் வாயிலாக குறுக்கு காற்றோட்டம் கிடைக்கும்போது, வீடு இயற்கையாகவே ஆரோக்கியமான சூழலாக மாறுகிறது.

தரைமட்ட ஜன்னல்கள் மற்றும் பக்க வாசல்களை, பாதுகாப்பு பார்வையில் கூடுதல் கவனத்துடன் வடிவமைக்க வேண்டும். தரமான கிரில், நம்பகமான 'லாக்கிங் சிஸ்டம்', குழந்தைகள் பாதுகாப்புக்கான தாழ்ப்பாள் ஆகியவை அவசியம். அழகிற்காக பாதுகாப்பை சமரசம் செய்வது எதிர்காலத்தில் பெரிய சிக்கல்களுக்கு காரணமாகலாம்.

ஜன்னல்கள், வெளியுலகத்துடன் வீட்டை இணைக்கும் பாலமாக செயல்படுகின்றன. ஆனால், நகர்ப்புறங்களில் அருகருகே கட்டடங்கள் அமைந்திருக்கும் நிலையில் தனியுரிமை மிக முக்கியமாகிறது. இன்றைய நகர்ப்புற கட்டுமானங்களில் அடுத்த வீட்டின் சுவர் மிக அருகில் இருக்கின்றன.

இச்சூழலில் ஜன்னல், வாசல் வடிவமைப்பு என்பது அழகுக்கானது மட்டும் அல்ல; பாதுகாப்பு தொடர்பானது தீர்வுகளை தருபவையும்கூட. வீட்டின் உள்ளே போதுமான வெளிச்சம், காற்றோட்டம், பாதுகாப்பு, தனியுரிமை ஆகியன இருந்தால்தான் அது உண்மையான கனவு இல்லமாக மாறும்.






      Dinamalar
      Follow us