PUBLISHED ON : ஆக 01, 2026 06:11 PM

அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள மிக உயர்ந்த மலையான 'கிரானைட் பீக்' பகுதிக்குச் சில நாட்களுக்கு முன் மலையேற்றப் பயணம் மேற்கொண்ட குழுவினருடன் 32 வயதுடைய செவிலியர் டேவிட் சிபால்டியும் உற்சாகமாகப் பயணித்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்தப் பயணம் ஒரு நொடிக் கவனச்சிதறலால் பதைபதைக்க வைக்கும் ஒரு கொடூர விபத்தாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மலையின் உச்சியை நெருங்கும் அந்த இறுதி தருணத்தில், ஆபத்தான 'ப்ரோஸ்-டூ-டெத் பீடபூ' பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது டேவிட் எதிர்பாராதவிதமாகப் பாறையில் கால்நழுரி கீழே விழுந்தார்.
மருத்துவமனையில் காயப் பராமரிப்புப் பிரிவில் செவிலியராகப் பணியாற்றும் அனுபவம் அந்த ஆபத்தான கட்டத்தில் அவருக்குக் கைக்கொடுத்தது. மரண பயம் கவ்விக்கொள்ளும் அந்த விநாடியிலும் பீதியடையாமல், தனது மருத்துவ அறிவைக் கொண்டு உடனே காயத்தைத்தானே சுய பரிசோதனை செய்து கொண்டார்.
குச்சி எந்த முக்கிய உறுப்பையும் பாதிக்கவில்லை.ரத்தப்போக்கு அதிர்ஷ்டவசமாக மிகவும் குறைவாகவே உள்ளது.தன்னால் தொடர்ந்து இயல்பாக மூச்சுவிட முடிகிறது.
உடலைத் துளைத்த இரும்புக்குச்சியுடன், பாறைகள் நிறைந்த கோரமான மேடு பள்ளங்களையும், உறைபனிச் சமவெளிகளையும் கடந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக, 10 மைல்கள் (16 கி.மீ தொலைவு) நடந்து அடிவாரத்தை அடைந்தார். அந்தச் சித்திரவதையிலும் அவர் வெளிப்படுத்திய மன உறுதி மனிதர்களின் எல்லையற்ற வலிமைக்குச் சிறந்த சான்றாகும்.
அடிவாரத்தை அடைந்தவுடன் அங்கு காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆபத்தான மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் அந்தக் குச்சி வெற்றிகரமாக அகற்றப்பட்டு அவர் முழுமையாக மீண்டு வந்தார்.
கடுமையான மரண ஆபத்தையும், உடல் வலியையும் தனது அசாத்திய மனத்துணிவாலும், மருத்துவ அறிவோடு எதிர்கொண்டு வெற்றி கண்ட டேவிட்டின் கதை, 'விடாமுயற்சி இருந்தால் மனிதனால் எத்தகைய கொடூரமான சூழ்நிலையையும் வெல்ல முடியும்' என்ற உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்கிறது.
-எல்.முருகராஜ்
