PUBLISHED ON : ஏப் 04, 2016
அ நிறம் | அளவு
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் கச்சபலி என்ற கிராமம் உள்ளது. இங்கு மாவட்ட நிர்வாகம் மதுக்கடை ஒன்றை நடத்தி வந்தது. இந்தக் கிராமத்துப் பெண்கள், சென்ற குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் 'மதுக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்' என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், மதுக்கடை வேண்டுமா, வேண்டாமா என்பதை உறுதி செய்யப் பொது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். கடந்த 29ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பில் மதுக்கடை கூடாது என 94 சதவிகித வாக்குகள் பதிவாயின.
