உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : பிப் 08, 2016
அ நிறம் | அளவு
பிப். 3 - கும்பகோணம், மகாமகக் குளத்தில் நீராடுதல் குறித்து 'வடமொழி கல்வெட்டு' ஒன்று பிரம்ம தீர்த்தேஸ்வரர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, தீர்த்தத் துறைகளின் வரைபடங்களுடனும் பெயர்களும் இருப்பதாக ஆய்வாளர் 'குடவாயில் பாலசுப்ரமணியன்' தெரிவித்தார். கல்வெட்டில் காணப்படும் வரைபடத்தில், 'மகாமக தடாகஸ்த தீர்த்தானி' என்ற தலைப்பிட்டு, அதன் கீழாக, 20 தீர்த்தங்களின் பெயர்களையும் குறிக்கப்பட்டு உள்ளன. இந்த வரைபடத்தையும், குறிப்புகளையும் கல்லில் பொறிக்கச் செய்தவர், கும்பகோணத்தைச் சேர்ந்த 'குரு ராஜாச்சாரியார்' என்கிற செய்தியும் இடம் பெற்றுள்ளது.
