sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சிறுவர் புத்தகம்: சிறந்த சிறுவர் புத்தகங்கள்

சிறுவர் புத்தகம்: சிறந்த சிறுவர் புத்தகங்கள்

சிறுவர் புத்தகம்: சிறந்த சிறுவர் புத்தகங்கள்


PUBLISHED ON : ஜூன் 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

01. சிறுவர் நாடோடிக் கதைகள்

தொகுப்பு: கி.ராஜநாராயணன்

வெளியீடு: அகரம் பதிப்பகம்

காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த பல சுவாரசியமான கதைகளின் தொகுப்பு. சிறுவர்களின் கற்பனை நிறைந்த உலகத்தை மேலும் விசாலமாக்கும் கதைகள்.

02. ஆயிஷா (குறுநாவல்)

இரா.நடராசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

ஓர் அறிவியல் நூலுக்கு அதன் ஆசிரியை முன்னுரை எழுதுவதாக அமைந்ததே, இந்த நாவல். கல்வியை, அதன் நடைமுறையை, கற்பிக்கும் முறையை, அது குழந்தைகளிடம் ஏற்படுத்தும் பாதிப்பை அழுத்தமாய்ச் சொல்லும் புத்தகம்.

03. குட்டி இளவரசன்

அந்துவான் எக்சுபரி (தமிழில்: வெ.ஸ்ரீராம்)

வெளியீடு: க்ரியா பதிப்பகம்

பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகம். விமானம் பழுதடைந்ததால், பாலைவனத்தில் தரையிறங்குகிறார் விமானி. வெப்பம் வாட்டும் சூழலில், விண்மீனிலிருந்து வரும் ஓர் அழகிய சிறுவனோடு கழிக்கும் அற்புதப் பொழுதுகளே கதையாக விவரிக்கப்பட்டுள்ளது.

04. பூக்குட்டி சுஜாதா

வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்

சிறுவர்களுக்கு இடையிலான நட்பில் ஏழை, பணக்காரன், சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உணர்த்தும் கதை. ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இந்த நாவல் பெரியவர்களும் வாசிக்கக்கூடியது.

05. பிஞ்சுகள்

கி.ராஜநாராயணன்

வெளியீடு: அன்னம் பதிப்பகம்

இயற்கை எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். சிறுவர்களுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை ஊட்டும் விதத்தில், குறுநாவலாக எழுதப்பட்டது இந்தப் புத்தகம். இயற்கையை பாதுகாப்பதன் அவசியம், உயிர்களின் மீது ஏற்படும் பரிவு ஆகியவற்றை ஒரு சிறுவனின் பார்வையில் விவரிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us