sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/உணவுச் சங்கிலியில் அறுபடும் கண்ணிகள்!

உணவுச் சங்கிலியில் அறுபடும் கண்ணிகள்!

உணவுச் சங்கிலியில் அறுபடும் கண்ணிகள்!


PUBLISHED ON : செப் 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமேசான் உலக உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. அரியவகை மக்கா கிளிகள் முதல் மரத்தவளை போன்ற பல்லுயிர்கள் வாழ வழிவகுக்கும். ஏறக்குறைய 378 இன ஊர்வன உயிரினங்கள் வாழும் காடு, இன்று காட்டுத்தீக்கு இரையாகி அழிந்து வருகிறது.

இயற்கைப் பேரிடரால் ஒருபக்கம் ஆபத்து. மற்றொரு பக்கம் பழங்குடியினராலும் ஆபத்து.

அமேசான் பழங்குடியினர் ஊர்வனவற்றை விரும்பி உண்ணுவதால், அவர்களும் ஊர்வன உயிரினங்களின் அழிவிற்கு சவாலாகத் திகழ்கின்றனர்.

அமேசான் காட்டுத்தீ பரபரப்பு!

மற்ற உயிரினங்கள் போல் அல்லாது பாம்புகள் இயற்கைச் சீற்றங்களின்போது அருகிலிருக்கும் பொந்துகள், பாறை இடுக்குகள், மண்ணுக்கடியில் என பதுங்கிக்கொள்ளும். காட்டுத் தீ போன்ற பேரிடர்களில் இவை தப்பிக்க வழியின்றி இறக்கின்றன. 250 கிலோ எடை கொண்ட அனகோண்டா பாம்பு முதல் ஒரு கிராம் கூட எடை இல்லாத சிறுபாம்பு வரை வாழக்கூடியக் காடு, அமேசான்.

பாம்பு இனங்கள்:

பச்சை அனகோண்டா, மலைப்பாம்புகள், புஷ்மாஸ்டர், ஈட்டித்தலையன் பாம்பு, மரகத மலைப்பாம்பு, கண்ணிமை விரியன், பவளப் பாம்பு, காட்டுக்குழி விரியன், தென் அமெரிக்க கிலுக்கப் பாம்பு, புழுப் பாம்பு என, பல வகைப் பாம்பு இனங்கள் அமேசான் காடுகளில் வாழ்கின்றன.

காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடரில் பாம்புகள் தப்பிக்க வழியின்றி இறக்க நேரிடும். இதனால் உணவுச் சங்கிலியின் மூன்றாம் நிலையில் முக்கிய பங்கு வகிக்கும் பாம்புகளின் எண்ணிக்கை குறையும். இதனைச் சுற்றுச்சூழலின் முறிவு என்று கூறுவர்.

இதன் விளைவாக, உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு, பல்லுயிரிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு/ ஆபத்து ஏற்படும்.

- ந.ச.மனோஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us