PUBLISHED ON : ஏப் 30, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை ஒரே தாளாக இணைக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களுக்கு இரண்டு தாள்களாக, தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கப் பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது-. அதன்படி, மொழிப் பாடங்களுக்குத் தேர்வுகளைக் குறைக்கலாம் என்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அவ்வாறு ரத்தானால், தேர்வுத் துறைக்கு 36 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் சுமை குறையும். அதேபோல, மேல்நிலை வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் முக்கியப் பாடங்களின் எண்ணிக்கை 4ஆக உள்ளது. அதை 3 ஆக மாற்றியமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.