PUBLISHED ON : பிப் 04, 2019

பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி சியோபன் ஞானகுலேந்திரன். இவர் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்ல உள்ளார். லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்வெளி தொடர்பான கல்வி கற்று வருகின்றனர். செயற்கைக்கோள்களை உருவாக்குவது, அவற்றை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து ஆராய்ச்சி செய்வது தொடர்பான பல்வேறு துறைகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் இரு மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப, பிரிட்டன் விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது.
இதற்கு விண்வெளி ஆய்வுகளோடு, நுண்ணுயிரிகள் குறித்து ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் இலங்கை தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரனும் பிரிட்டனைச் சேர்ந்த டியானா ஆகிய இரு மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி ஓடத்தில் சில நாட்கள் தங்கியிருந்து, நுண்ணுயிரிகள் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளனர்.
