PUBLISHED ON : ஆக 01, 2016

சாந்தி: ஹாய் மஞ்சு! எப்பவும் நெருப்பா இருப்ப, இப்போ என்ன வெறுப்பா இருக்குற?
மஞ்சு: கடுப்பா இருக்கும்போது நெருப்பு, வெறுப்புன்னு அடுக்குமொழி பேசாதடீ!
சா: சரி சரி! இயல்பு நிலைக்குத் திரும்பு, என்ன நடந்துச்சுன்னு சொல்லு?
ம: நான் இன்ஜினியர் ஆகணும்னு அப்பா ஆசைப்படுறார். டாக்டர் ஆகணும்னு அம்மா சொல்றாங்க. ஆறாவது படிக்கிற நமக்கு இதெல்லாம் தேவையா?
சா: இப்போதான் சொல்றாங்களா? பரவாயில்லையே... எங்க வீட்டுல இந்த டிஸ்கஷன்ஸ் எல்லாம் போன வருஷமே முடிஞ்சது!
ம: அப்பப்பா! எல்லா பேரன்ட்ஸும் இப்படித்தானா? அவங்க படிக்க நினைச்சதை எல்லாம் நாம படிக்கணுமா?
சா: 'இந்த வருஷம் இன்ஜினியரிங் கவுன்சலிங்ல ஒரு லட்சம் இடங்கள் காலி'ன்னு நியூஸ்ல சொன்னாங்க.
ம: ஹா... ஹா... அப்படின்னா நாம படிக்கும்போது எல்லா காலேஜும் காலியாதான் இருக்கும்.
சா: அத மறந்துட்டு இங்க பாரு! இந்த பட்டர்ஃப்ளைக்கு எதாச்சும் கவலை இருக்குமா? எவ்வளவு சந்தோஷமா சுத்துது பாரு...
ம: பட்டர்ஃப்ளை பார்த்ததும் ஒரு டவுட் வருது. 'பட்டர்'னா வெண்ணெய்தான? பட்டாம்பூச்சிக்கும் வெண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்?
சா: இப்படிலாம் யோசிச்சு, பட்டர்ஃப்ளை பறக்குறதப் பார்த்து கேயாஸ் தியரியா சொல்லப்போற?
ம: பட்டாம்பூச்சிய ஆராய்ச்சி பண்ணி, பட்டம் வாங்கலாம்ன்னு இருக்கேன். தெரிஞ்சாச் சொல்லு, இல்லன்னா சேர்ந்து தெரிஞ்சுக்கலாம்.
சா: 'Buterfleoge' என்கிற வார்த்தையில் இருந்துதான் இந்தப் பெயர் வந்திருக்கு!
ம: ஓ! தெரியுமா உனக்கு? இப்போ எப்படி, திடீர்ன்னு ஞானம் வந்துச்சு?
சா: அது மட்டுமில்ல! தேவதைகள் எல்லாம் சேர்ந்து, திருடிய பால் மற்றும் வெண்ணெயில் இருந்து பட்டாம்பூச்சியை உருவாக்கினாங்கன்னு ஒரு கதையும் இருக்கு!
ம: திருட்டுப் பால், வெண்ணெய்ல இருந்தா வந்துச்சு பட்டர்ஃப்ளை? அதனாலதான், பூவுல இருக்குற தேனைத் திருடிச் சாப்பிடுதோ?
சா: அது திருடலை. 'வண்ணத்துப்பூச்சி தன் காலில் ஒரு காட்டைச் சுமந்து செல்கிறது'ன்னு ஒரு கவிதையே இருக்கு. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பட்டாம்பூச்சிதான் தாவர இனங்களின் உயிர் நண்பன்.
ம: வாவ்வ்வ்..! நீ சொன்ன மத்த விஷயங்களைவிட இதுதான் பட்டர், ஸாரி... பெட்டர்
