PUBLISHED ON : ஜன 13, 2025

1. பல்வேறு ராகங்களின் கலவையில் உருவான கீர்த்தனை _______________ என்று அழைக்கப்படுகிறது.
2. கர்நாடக சங்கீதத்தின் தந்தை என அழைக்கப்படும் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசை மேதை _______________
3. இந்துஸ்தானி இசை _______________ கலாசாரத்தில் இருந்து வந்தது.
4. கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகள் சிலவற்றின் இறுதியில் ஹிந்துஸ்தானி பூர்விகம் கொண்ட _______________ பாடப்படும்.
5. நாதஸ்வரத்தின் கம்பீர இசையை உணர்த்தும் ராகம் _______________
6. புரந்தர தாசர் கீர்த்தனைகள் அதிகமாக எழுதப்பட்ட மொழிகள் _______________, _______________
7. தன் இசை மாணவர்களுக்கு புரந்தர தாசர் உருவாக்கிய முக்கியப் பயிற்சிப் பாடம் _______________
8. புரந்தர தாசர் இயற்றிய வைஷ்ணவ நூல் _______________
9. தியாகராஜர் சமாதி அடைந்த இடம் _______________
10. தியாகராஜர் இசையமைத்த ஆயிரம் தெலுங்கு கீர்த்தனைகள் அரங்கேற்றப்பட்ட இடம் _______________
விடைகள்:
1. ராகமாளிகை
2. புரந்தரதாசர்
3. பெர்சிய (தற்போதைய ஈரான் கலாசாரம்)
4. தில்லானா
5. கம்பீர நாட்டை
6. கன்னடம், சமஸ்கிருதம்
7. ஸ்வராளி பல்லவி
8. பாகவத புராணம்
9. திருவையாறு
10. தஞ்சாவூர் அரண்மனை