தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொக்க மஞ்சு! ஷார்ப் சாந்தி

மொக்க மஞ்சு! ஷார்ப் சாந்தி

மொக்க மஞ்சு! ஷார்ப் சாந்தி


PUBLISHED ON : மார் 28, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 28, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம : எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

சா : என்ன மஞ்சு காலைலயே 'உலகப் பொதுமறை' படிச்சுட்டு இருக்க?

ம : ஏய்! நான் படிக்குறது உலகப் பொதுமறை இல்ல திருவள்ளுவர் எழுதுன திருக்குறள்.

சா : சரிதான். திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, உத்தரவேதம், பொய்யாமொழி, தெய்வநூல், முப்பால், வாயுறை வாழ்த்து இப்படிப் பல பெயர்கள் இருக்கு.

ம : ஆஹா! திருக்குறள முழுசாப் படிச்சாதான் இதெல்லாம் தெரியும் போல.

சா : சீக்கிரமா தெரிஞ்சுக்கோ... தமிழ்ல முதல் எழுத்து 'அ'. கடைசி எழுத்து 'ன்'. அதே மாதிரி திருக்குறளும் 'அ'ல ஆரம்பிச்சு 'ன்'லதான் முடியும், தெரியுமா?

ம : வள்ளுவர், தமிழ்ல எழுதுனதால, 'அ'ல ஆரம்பிச்சு 'ன்'ல முடிச்சிருக்காரு.

சா : அப்படி சொல்றயா! ஆனா தமிழ்ல 'ஔ' ங்கற உயிர் எழுத்தைத் தவிர மத்த எல்லா உயிர் எழுத்துகளையும் குறள்ல பயன்படுத்திருக்காரே அது ஏன்?

ம : அவ்வ்வ்வ்... ஔ... இதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கலாம்.

சா : அது தெரியல. திருக்குறள்ல தமிழ் இல்ல தெரியுமா!

ம : ஆ... உளறாத சாந்தி! இவ்ளோ நேரமா தமிழ்லதான நான் படிச்சேன்…

சா : தமிழ்லதான் படிச்சே. ஆனா 1330 குறள்கள்ல ஓர் இடத்துல கூட 'தமிழ்'ங்குற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தவே இல்லை!

ம : அப்படியா? ஏன்?

சா : ஏன்னு தெரியல. ஆனா திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். மனிதர்கள் எப்படி வாழணும்கிற தகவல்கள் ரொம்ப இருக்கு.

ம : அதனாலதான் 'உலகப் பொதுமறை'ன்னு சொல்றாங்க, இல்லையா?

சா : அது மட்டுமில்ல. அதிகமான மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்ல இதுவும் ஒண்ணு.

ம : ஓ! உலக மக்கள் எல்லாரும் நம்ம திருக்குறளைத் தேடித் தேடிப் படிக்குறாங்க. நானும் படிக்கப் போறேன். அப்புறம் வந்து நீ சந்தேகம் கேளு சாந்தி...

சா : !!??

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us