
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்று அறிவித்தார். இதனால், தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடங்களாகக் கொண்டு, இப்புதிய மாவட்டங்கள் செயற்படும் என கூறப்பட்டுள்ளது.

