PUBLISHED ON : அக் 13, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 'மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை' என்ற இந்தத் திட்டத்தில், 10ஆம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 1ல் தொடங்கி, நவம்பர் 15 வரை http://www.maef.nic.in இணையதளத்தில் நேரடியாகப் பதியலாம். அதன் நகலை கல்வி அறக்கட்டளை முகவரிக்கு நவம்பர் 30க்குள் அனுப்ப வேண்டும்.

