PUBLISHED ON : மார் 16, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெர்மனியில் ஜூன் மாதம் நடைபெற உள்ள, நோபல் விஞ்ஞானிகளுடனான சந்திப்புக்கு, மும்பை மாணவி ஜெயீதா சாகா தேர்வாகியுள்ளார். ஜெர்மனின் லிண்டாவு நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், எழுபது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் ஒன்று கூடுகின்றனர். அப்போது உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 மாணவர்களைச் சந்திக்கின்றனர். இதில் இந்தியாவில் இருந்து ஒருவராக ஜெயீதா தேர்வாகியுள்ளார்.

