
ஏப்ரல் 24, 1820 - ஜி. யு. போப் பிறந்த நாள்
தமிழுக்குச் சேவை செய்த கனடா நாட்டு மத போதகர். ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஏப்ரல் 24, 1973 - சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள்
இந்திய கிரிக்கெட் வீரர். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என சாதனைகள் படைத்தவர். பத்மவிபூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.
ஏப்ரல் 25, 1874 - மார்க்கோனி பிறந்த நாள்
வானொலியின் தந்தை. கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்கி, மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பினார். இதற்காக இயற்பியலில் நோபல் பரிசு கிடைத்தது.
ஏப்ரல் 25, 1912 - மு.வரதராசனார் பிறந்த நாள்
தமிழறிஞர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'அகல் விளக்கு' என்ற நாவலுக்கு 1963இல் சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது.
ஏப்ரல் 27, 1791 - சாமுவேல் மோர்ஸ் பிறந்த நாள்
தந்தி அனுப்புவதற்காக மோர்ஸ் கோட் (Morse code) என்கிற சங்கேத மொழியை உருவாக்கிய அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்பதை நிரூபித்தார்.
ஏப்ரல் 29, 1891 - பாரதிதாசன் பிறந்த நாள்
தமிழ்க் கவிஞர். பல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதைத் தொகுப்பு, கதைகள் எழுதி இருக்கிறார். தமிழக அரசு இவரது படைப்புகளை 1990இல் நாட்டுடைமை ஆக்கியது.