PUBLISHED ON : செப் 24, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடக்கும் வர்த்தகப் போர், பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா அதிகப்படுத்தி இருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீதான வரியைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. 6,000 கோடி டாலர் (சுமார் ரூ.4.3 லட்சம் கோடி) மதிப்புக்கு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இப்புதிய வரி விதிப்பு, தேன், காபி, தொழிற்துறைக்குத் தேவையான இரசாயனப் பொருட்கள் என, பல்வேறு பொருட்களின் மீதும் பாய்கிறது.
வர்த்தக உரசல்களைத் தவிர்க்கவும், அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை நிறுத்தவுமே இந்த வரி விதிப்பு என, சீனாவின் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

