PUBLISHED ON : அக் 30, 2017

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் தீப்தி ரெக்மி, 11 வயது. இவர், நிறங்களை முகர்ந்தே அதன் நிறம் என்ன என்பதைக் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கண்கள் கட்டப்பட்ட நிலையில், அவரிடம் ஏதேனும் ஒரு நிற அட்டையையோ, துணியையோ கொடுத்தால் அதை முகர்ந்து பார்த்து, அதன் வண்ணம் என்ன என்பதைத் துல்லியமாகச் சொல்கிறார். மேலும், செய்தித்தாள்களில் உள்ள எழுத்துகளையும் முகர்ந்தே கண்டுபிடித்து வாசிக்கிறார். தீப்திக்கு, சினஸ்தேசியா (Synaesthesia) எனும் பாதிப்பு இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை பாதிப்பால், புலன்களுக்கு உரிய இயற்கையான செயல்திறனைவிட, கூடுதல் திறன் இருக்கும். 'இது எனக்கு கடவுள் கொடுத்த வரம்; எனது இந்தத் திறனைப் பயன்படுத்தி, கண் பார்வையற்றவர்களுக்கு ஏதேனும் உதவ முடியுமா என்று பார்ப்பேன்' என்று தீப்தி தெரிவித்துள்ளார்.
