காசியில் உழவாரப்பணி நிகழ்த்த உள்ள சென்னை சிவனடியார்கள்
காசியில் உழவாரப்பணி நிகழ்த்த உள்ள சென்னை சிவனடியார்கள்
PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறைப்பணியில் கணேசன் தலைமையிலான அடியார்கள் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக 276 அடியார்கள் கொண்ட குழு சென்னையில் இருந்து ரயில் மூலம் அலகபாத், அயோத்தி,மற்றும் காசி சென்று உழவாரப்பணியினை நிகழ்த்துகின்றனர்.
காசியில் கைலாய வாத்தியத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி அங்கும் மக்களிடம் துணிப்பை வழங்குகின்றனர்.ஊர்வலத்தின் போது இந்தி,ஆங்கிலம்,தமிழில் எழுதப்பட்ட விழிப்புணர்வு பாததைகள் ஏந்திச் செல்வர்.
காசியில் கங்கைக் கரையில் சிவ பூஜை,மாதேஸ்வர பூஜை,திருவாசக முற்றோதல்,நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை 1001 முறை உலக நன்மைக்காக எழுதுதல், பன்னிரு திருமுறை பராயணம் செய்தல்,மரக்கன்றுகள் நடுதல்,276 வது உழவாரப்பணி சிறப்பு மலர் வெளியிடுதல், அன்னதானம்,எளியவர்களுக்கு ஆடைதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தவுள்ளனர்.
வருகின்ற 30,31,01,02 ஆகிய தேதிகளில் உழவாரப்பணியை நடத்திவிட்டு சென்னை திரும்புகின்றனர்.
-எல்.முருகராஜ்