sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயராகிறது திருமலை..

/

அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயராகிறது திருமலை..

அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயராகிறது திருமலை..

அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயராகிறது திருமலை..

1


PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1251950


அன்னமாச்சார்யா

இசை மேதை, ஏழுமலையான் பக்தர்

தென்னிந்திய இசையில் ஏராளமான மரபுகளைத் தோற்றுவித்தவர்,32,000 கீர்த்தனைகளை இயற்றியவர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் கிராமத்தில் (1408) பிறந்தவர்.

தென்னிந்திய இசையில் ஏராள மான மரபுகளைத் தோற்றுவித்தார். பஜனை மரபைத் தொகுத்து வழங்கிய சிறப்பு பெற்றவர். பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் இவரால்தான் உருவாக்கப்பட்டது.

ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இவரது பல கீர்த்தனைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பிரதிபலிப்பாக உள்ளன. ராமானுஜர் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.

சாதி ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக எதிர்த்தார். 'இறைவன் ஒருவனே. அவன் பாரபட்சம் இல்லாதவன். சாதி, நிறம், ஏழை, பணக்காரன் என்று எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு' என்று தனது 'பிரம்மம் ஒக்கடே' பாடலில் சொல்கிறார்.

தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் ஏராளமான பாடல்களை இயற்றினார். சிலமுறை கேட்டாலே புரியும் வகையில் எளிமையாக, தெளிவாக இருப்பது அவற்றின் சிறப்பம்சம். இவரது ராம பக்திப் பாடல்கள் பிரசித்தி பெற்றவை. 'பதங்கள் அடங்கிய கவிதையின் பிதாமகர்' எனப் புகழப்பட்டார். தனது காலத்துக்கு முன்பு இருந்த பாடல்களை ஆராய்ந்து பாட உரை வரிசை எழுதியுள்ளார்.

சமஸ்கிருதத்தில் 'சங்கீர்த்த லட்சணம்', 'வெங்கடாசலபதி மஹிமா' ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். தெலுங்கில் 12 சதகங்களை (ஒரு சதகம் 100 பாடல்கள் கொண்டது) படைத்துள்ளார். இதில் 'வெங்கடேஸ்வர சதகம்' என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் படைத்த 'த்விபர்த ராமாயணா', 'ஸ்ருங்கார மஞ்சரி' ஆகியவை தெலுங்கு இலக்கியத்தில் முக்கிய நூல்களாகப் போற்றப்படுகின்றன.

Image 1251951


தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரும் பிரபலமான 'சுபத்ரா கல்யாணம்' என்ற நூலை எழுதியவருமான திம்மக்கா இவரது மனைவி. இவர்களது மகன் திருமாலாச்சாரியார், பேரன் சின்னய்யா ஆகியோரும்கூட, தென்னிந்திய சங்கீத வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள்.

இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 'அன்னமய்யா' என்ற தெலுங்கு திரைப்படம் 1997-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பல தெலுங்கு திரைப்படங்களில் இவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தென்னிந்திய சங்கீத பாரம்பரியத்தின் முக்கிய சின்னமாகப் போற்றப்படுபவரும், கவிஞர், அறிஞர், ஆச்சார்யா, அன்னமய்யா என்றெல்லாம் போற்றப்படுபவருமான அன்னமாச்சார்யா 95-வது வயதில் (1503) மறைந்தார்.

அவரது 521 வது பிறந்த நாள் திருப்பதியில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

காலை 6 மணி முதல் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் மற்றும் பஜனை மண்டல கலைஞர்கள் அன்னமாச்சாரியாரின் 'சப்தகிரி சங்கீர்த்தன கோஸ்திகானம்' நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அதன்பின், மெட்லபூஜை நடைபெறும். பின் சங்கீர்த்தனம் பாடியபடி கால் நடையாக திருமலை ஏறுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள பஜனை மண்டல கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.திருமலையில் உள்ள நாராயணகிரி கார்டனில் ஏப்., 5ல் கோஷ்டிகானம் மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

ஏப்ரல் 6 முதல் 8 வரை மூன்று நாட்களுக்கு திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திரம், தல்லாபாகாவில் உள்ள தியானமந்திரம் ஆகிய இடங்களில் இலக்கிய கருத்தரங்குகளும், அவரின் சொந்த ஊரில் பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

ஏப்ரல் 6 முதல் 8 வரை மூன்று நாட்களுக்கு திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திரம், தல்லாபாகாவில் உள்ள தியானமந்திரம் ஆகிய இடங்களில் இலக்கிய கருத்தரங்குகளும், துறவி கவிஞரின் சொந்த ஊரான 108 அடி அன்னமய்யா சிலையில் ஆன்மீகம் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

--எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us