PUBLISHED ON : அக் 18, 2025 12:00 AM

அருணிமா குமார், இந்தியாவின் முன்னணி குச்சிபுடி நடனக் கலைஞர்களில் ஒருவர். 1978 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், உலகளவில் குச்சிபுடி நடனத்தை கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்குவகிக்கிறார்.தற்போது 47 வயதாக உள்ள இவர், 35 ஆண்டுகளுக்கும் மேலாக குச்சிபுடி நடனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
தற்போது லண்டனில் வசித்து வருகிற அருணிமா குமார்,குச்சிபுடியின் வாழும் வரலாறு; அவரது கலைப்பயணம் பாரம்பரியத்தை காப்பாற்றி, உலகளவில் இந்திய கலாச்சாரத்தின் ஒளியை பரப்பும் பணியில் அமைந்துள்ளது. கலை, சமூக சேவை, மற்றும் உலகளாவிய அங்கீகாரம் ஆகியவற்றின் மூலமாக அவர் கலைஞர்களுக்கான முன்னோடியாகவும் மற்றும் இந்திய கலையின் பெருமையாகவும் விளங்குகிறார்.
-எல்.முருகராஜ்