PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

தாலே வாலே மகாதேவ்
உ.பி.,பிரயாக்ராஜ்ஜில் முக்திகஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நாகேஸ்வர் மகாதேவ் கோவில்,இங்கு நடைபெறும் வித்தியாசமான வழிபாடு காரணமாக இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அப்படியென்ன வித்தியாசமான வழிபாடு என்கிறீர்களா?
தங்களது அரிய ஆசைகள், ஆழமான நோக்கங்கள்,மனக்குமுறல்கள் அல்லது குடும்ப நலன்கள்இவை அனைத்தையும் ஒரு பூட்டில் நிரப்பி,அதை கோவில் கம்பிகளில் பூட்டி தொங்கவிடுகின்றனர்.
எடுத்துச் செல்லும் சாவியை வீட்டில் உள்ள சாமி படத்திற்கு அருகில் வைத்துவிடுகின்றனர்,இனி தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வழக்கமான வேலைகளை கவனிக்கச் சென்றுவிடுகின்றனர்.
ஒரு சிலர் மட்டும் வேண்டுதல் நிறைவேறியதும் தாங்கள் கோவிலில் பூட்டிய பூட்டை தேடிப்பிடித்து திரும்ப திறந்து வீட்டிற்கு கொண்டு வருகின்றனர்.
கோவிலில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரு பூட்டு தொங்குகிறது, ஒவ்வொரு பூட்டும்,ஒருவரின் வேண்டுதலை,வேண்டுகோளை,கனவுகளை,கவலைகளை,நம்பிக்கைகளை சுமந்து கொண்டு இருக்கிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை
-எல்.முருகராஜ்