sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சிந்திப்போமா

/

நாட்டு கால்வாயில் மண்ணை கொட்டி திருநீர்மலையில் ஆக்கிரமிப்பு முயற்சி

/

நாட்டு கால்வாயில் மண்ணை கொட்டி திருநீர்மலையில் ஆக்கிரமிப்பு முயற்சி

நாட்டு கால்வாயில் மண்ணை கொட்டி திருநீர்மலையில் ஆக்கிரமிப்பு முயற்சி

நாட்டு கால்வாயில் மண்ணை கொட்டி திருநீர்மலையில் ஆக்கிரமிப்பு முயற்சி


ADDED : மார் 16, 2025 12:28 AM

Google News

ADDED : மார் 16, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநீர்மலை, திருநீர்மலை ஏரியில் இருந்து, சுப்புராயன் நகர், சரஸ்வதிபுரம் விரிவு, ரங்கா நகர் வழியாக செல்லும் நாட்டு கால்வாய் என்ற மழைநீர் கால்வாய், அடையாறு ஆற்றை அடைகிறது.

மழை காலத்தில், திருநீர்மலை ஏரியின் உபரி நீர், நாகல்கேணி, பம்மல் பகுதிகளின் வெள்ளம், இக்கால்வாய் வழியாக ஆற்றுக்கு செல்கிறது.

இக்கால்வாயை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளம் தடைபட்டு, சரஸ்வதி புரம், சுப்புராயன் மற்றும் ரங்கா நகர் பகுதிகளை சூழ்ந்து விடுகிறது.

இந்நிலையில், ரங்கா நகர், ஐந்தாவது தெருவில், கால்வாயில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு முயற்சி நடப்பதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

நாட்டு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக துார் வார வேண்டும். மேற்பகுதியில் மூடி போட வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

கழிவு நீர் கலப்பதால், நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. இந்நிலையில், கால்வாயில் மண்ணை கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையெனில், இருக்கும் கால்வாயும் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us