ADDED : மார் 14, 2026 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்: கொளத்துார், பாரத் ராஜிவ்காந்தி நகரில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய் துறையினர் நேற்று, ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர்.
இந்நிலையில், வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று, செந்தில் நகர் சிக்னல் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியாருக்கு இடத்தை தர முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தியபின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

