/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
/
அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
அக் 14, 2025

நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீடு நடைபெற்றது..
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா எழுதிய 'தன்முனைக் கவி ஐப்பசி' தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் கவிநிலா மோகன் வெளியிட முனைவர் வே.புகழேந்தி பெற்றுக் கொண்டார். கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி எழுதிய 'தன்முனைத் தளிர் ஐப்பசி' தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ வெளியிட கவிஞர் தா.உமா பெற்றுக் கொண்டார்.
பாவலர் கல்லை மலரடியான் எழுதிய 'தன்முனை மலர் ஐப்பசி' தன்முனைக் கவிதைகள் நூலை முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி வெளியிட கவிஞர் புதுகை ஆதீரா பெற்றுக் கொண்டார்.
இந்நூலின் வெளியீட்டு விழாவில் முனைவர் வே.புகழேந்தி, கவிஞர் கவிநிலா மோகன், கவிஞர் வதிலைபிரபா, முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி, கவிஞர் புதுகை ஆதீரா, கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ, பன்முகத் தென்றல் ச.விஜய் ஆனந்த் மற்றும் கவிஞர் தா.உமா, உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியைக் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஒருங்கிணைத்தார். தன்முனைக் கவிதை வரலாற்றில் மாதம் ஒருநூல் வரிசையில் 'ஐப்பசி' மாதத்தின் நூல்கள் வெளியீடு சிறப்புற நடைபெற்றது.
- சான்ஆன்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement