
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
அரிசி - இரண்டரை கப்
உளுந்தம் பருப்பு - 1 கப்
அவல் -- கால் கப்
சீரகம் -- 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் -- தேவையான
அளவு.
செய்முறை:
அரிசி, உளுந்தம் பருப்பை ஐந்து மணி நேரமும், அவலை 45 நிமிடமும், தனித்தனியாக ஊற வைக்கவும். இரவே அனைத்தையும், தோசை ஊற்றும் பதத்திற்கு மாவாக அரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
பிறகு, மாவில் உப்பு சேர்த்து, தோசை ஊற்றி, கார சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர்.
- எஸ்.அர்ச்சனா, மதுரை.

