
என் வயது, 27. அஞ்சல் துறையில் பணிபுரிகிறேன். குழந்தை பருவம் முதல், சிறுவர்மலர் வாசகன். தமிழை பிழையின்றி எழுதவும், படிக்கவும் உதவி வருகிறது, சிறுவர்மலர்.
இதில் வரும் தொடர்கதைகளை, ஒவ்வொரு வாரமும் ஆவலுடன் படிக்கிறேன். அதற்காக, வாரம் தோறும் சிறுவர்மலர் இதழை எதிர்பார்த்து காத்திருப்பேன். இதழ் வந்தவுடன், ஒரே மூச்சில் அனைத்து பக்கங்களையும் படித்து முடிப்பது தனி சுகம். சிறுவர்மலர் இதழ், எனக்கு மானசீக நண்பனாக திகழ்கிறது.
இதில் வரும் கட்டுரைகள், அறிவியல் அறிவை எளிமையாக ஊட்டுகின்றன; பொது அறிவை புகட்டுகின்றன. பொழுதுபோக்க, 'டிவி' மற்றும் மொபைல் போன் போன்ற சாதனங்கள் வந்தாலும், சனிக்கிழமையானால், சிறுவர்மலர் இதழைத் தான் மனம் தேடுகிறது.
இதுபோல், கோடிக்கணக்கான வாசகர்களுக்கு, வாழ்நாள் நண்பனாக திகழும் சிறுவர்மலர், மேலும் வளர, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
- எம்.ராஜா, திருவள்ளூர்.
தொடர்புக்கு: 97510 86444

