sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 மே-யில் நடந்த நிகழ்வுகள்

/

2025 மே-யில் நடந்த நிகழ்வுகள்

2025 மே-யில் நடந்த நிகழ்வுகள்

2025 மே-யில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

மே10: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு ஆதரவாக சென்னை, டிஜிபி அலுவலகம்-தீவுத்திடல் வரை முதல்வர் ஸ்டாலின் நடைபயணம்.

மே11: புதிய 11 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளை முதல்வர் துவக்கினார்.

மே16: ரூ. 1000 கோடி முறைகேடு வழக்கில், டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.

மே20: சிவகங்கை சிங்கம் புணரியில் கிரஷர் குவாரியில் பாறை விழுந்து விபத்து. 6 பேர் பலி.

மே21: பல்கலை., துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மே26: தமிழகத்தில் புதிதாக 11 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் துவக்கம்.

இந்தியா

மே3: நாட்டின் முதல் டிரான்ஸ்மீடியா பொழுதுபோக்கு நகரம், ஆந்திரா அமராவதியில் அமைக்கப் படுகிறது.

மே5: இந்தியாவில் முதன் முறையாக ஐதராபாத்தில் தங்க நகைகள் வாங்க, விற்பனை செய்வதற்கான ஏ.டி.எம்., -ஐ கோல்டுசிக்கா நிறுவனம் அறிமுகம் செய்தது.

மே7: இந்தியாவில் 2021 கணக்கின்படி, கருவுறுதல் விகிதம் 2.0 என உள்ளதாக அறிவிப்பு. அதிகமாக பீஹாரில் (3.0), குறைவாக டில்லி, மேற்கு வங்கத்தில் (1.4) என உள்ளது.

* மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உட்பட நாட்டின் 244 மாவட்டங்களில் 'போர் ஒத்திகை' நடந்தது.

மே8: உத்தரகண்டில் ஹெலி காப்டர் விபத்து. யாத்திரை சென்ற 6 பேர் பலி.

மே12: ராணுவ வீரர்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளித்தது ஆந்திர அரசு.

மே13: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்ததாக பொய் பிரசாரம் செய்யப்பட்ட பஞ்சாபின் ஆதம்பூர் விமானப் படை தளத்தில், ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

* பஞ்சாபின் அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி.

மே14: உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு. நவ.23ல் ஓய்வு பெற்றார்.

* எல்லை தாண்டியதாக கைதான பி.எஸ்.எப்., வீரர் பூர்ணம் குமார் ஷாவை இந்தியாவிடம் பாக்., ஒப்படைப்பு.

* ட்ரோன்களை இடை மறித்து அழிக்கும் 'பார்கவ அஸ்திரத்தை' டி.ஏ.எல்., நிறுவனம் வடிவமைத்துள்ளது.

* மணிப்பூரின் சாந்தலில் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலி.

மே17: பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை வெளிப் படுத்துதல், 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி விளக்கும் விதமாக அனைத்துக்கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுவை பல்வேறு நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது.

மே18: தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ. 18 பேர் பலி.

மே19: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா 'யு டியூபர்' ஜோதி மல்கோத்ரா உட்பட 12 பேர் கைது.

மே21: சத்தீஸ்கரில் பாது காப்பு படை தாக்குதலில் நக்சலைட் தலைவர் பசவ ராஜூ உட்பட 27 பேர் சுட்டுக் கொலை.

மே22: டில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த 'நிடி ஆயோக்' கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு. பிரதமர் மோடியை சந்தித்தார்.

மே23: நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மே26: பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட மகன் தேஜ் பிரதாபை ஆர்.ஜே.டி., யில் இருந்து நீக்கினார் லாலு பிரசாத்.

மே28: உள்நாட்டில் உருவான உலகின் முதல் உயர் தெளிவுத் திறன் கொண்ட 'பாரத் வானிலை முன்னறிவிப்பு அமைப்பை' மத்திய அரசு தொடங்கியது.

உலகம்

மே1: டிரினிடாட் டொபாகோ பிரதமராக இந்தியா வம்சாவளி கம்லா பெர்சாத் பிசாசர் பதவியேற்பு.

மே3: டில்லியில் பிரதமர் மோடி - அங்கோலா அதிபர் மேனுவேல் லாரன்சோ சந்திப்பு. சர்வதேச சோலர் கூட்டமைப்பில் 123 நாடாக அங்கோலா இணைந்தது.

மே4: ஏமன் பிரதமராக சலீம் பின் பிரெய்க் பதவியேற்பு.

மே14: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பதிவை ரத்து செய்தது அந்நாட்டு தேர்தல் ஆணையம்.

* கனடா வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளி அனிதா ஆனந்த் பதவியேற்பு.

மே23: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் வெளி நாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.

மே 24: அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலையில் வெளி நாட்டு மாணவர் சேர்க்கைக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.

மே26: ருமேனியா அதிபராக நிகுசர் டான் பதவியேற்பு.

மே28 : ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் அறிவிப்பு.

அழகோ அழகு...

மே31: தெலுங்கானா ஐதராபாத்தில் நடந்த உலக அழகி (மிஸ் வேர்ல்டு) போட்டியில் பட்டம் வென்றார் தாய்லாந்தின் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ. 16 வயதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்.

சிங்கப்பெண்

மே27: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த சி.ஐ.எஸ்.எப்., படையின் முதல் பெண் அதிகாரி கீதா சமேதா.

புதிய போப்

மே8: அமெரிக்காவின் ராபர்ட் பிரான்சிஸ் புதிய போப் ஆக தேர்வு. 'பதினான்காம் லியோ' என அழைக்கப்படுவார்.

அதிகரித்த கடற்கரை

மே29: இந்திய கடற்கரையின் நீளம் 7516.6 கி.மீ., என இதுவரை இருந்தது. தற்போது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் 11,098 கி.மீ., ஆனது.

டாப் 4

* மே4: ஆஸ்திரேலிய பிரதமராக அந்தோணி அல்பனீஸ் மீண்டும் பதவியேற்பு.

* மே6: ஜெர்மனி அதிபராக பிரட்ரிக் மெர்ஸ் பதவியேற்பு.

* மே13: பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

* மே15: சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி, தொடர்ந்து 14வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்பு.






      Dinamalar
      Follow us