sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வருடமலர்/2025 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2025 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்

2025 ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம்

ஏப்.1: கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

ஏப்.2: கச்சத்தீவை மீட்க இலங்கை அரசுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சட்டசபையில் தீர்மானம்.

ஏப்.4: உலகின் முதல் சிவாலயம் எனும் உத்தரகோச மங்கை மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏப்.7: தென்காசி உலகம்மன், காசிவிஸ்வநாதர் கோயிலில் 19 ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடந்தது.

ஏப்.8: கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், '10 மசோதாக்களை கிடப்பில் போட்டது தவறு. இவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும்' என உச்சநீதி மன்றம் தீர்ப்பு.

ஏப்.10: பா.ம.க., தலைவராக நானே இருப்பேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என ராமதாஸ் அறிவிப்பு. இதைத்தொடர்ந்து இருவரும் மாறி மாறி அறிவிப்பை வெளியிட்டதால் கட்சியில் குழப்பம்.

ஏப்.12: தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பு.

* பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம்.

ஏப்.17: அரசாணைகளை தமிழிலேயே வெளியிட அனைத்து துறை செயலர்கள், கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு.

ஏப்.18: ஊட்டி, கொடைக்கானல் உட்பட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 28 வித பிளாஸ்டிக் பொருட்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

ஏப்.19: சென்னையில், முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை (மெரீனா பீச் - செங்கல்பட்டு) துவக்கம்.

ஏப்.25: ஊட்டியில் கவர்னர் ரவி நடத்திய துணைவேந்தர் மாநாட்டை, அரசு பல்கலை துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.

ஏப்.30: தே.மு.தி.க., இளைஞர் அணி செயலராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதவியேற்பு.

இந்தியா

ஏப்.1: குஜராத்தின் தீசாவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து. 21 பேர் பலி.

* டில்லியில் பிரதமர் மோடி - சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பான்ட் சந்திப்பு.

ஏப்.4: பாலிவுட் நடிகர் மனோஜ்குமார் 87, காலமானார்.

ஏப்.6: மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலராக எம்.ஏ.பேபி தேர்வு.

ஏப்.8: டில்லியில் பிரதமர் மோடி - துபாய் இளவரசர், யு.ஏ.இ., துணை பிரதமர் ஷேக் ஹம்தான் சந்திப்பு.

ஏப்.10: மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். டில்லி திஹார் சிறையில் அடைப்பு.

ஏப்.13: பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வர இருந்து ரூ. 1800 கோடி போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஏப்.18: யுனெஸ்கோ உலக நினைவக பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்ப்பு.

ஏப்.21: டில்லியில் பிரதமர் மோடி - அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்திப்பு.

ஏப்.24: ஒடிசாவின் சிமிலிபல் தொல்லியல் பகுதி, நாட்டின் 107வது தேசிய பூங்காவாக அறிவிப்பு.

ஏப்.28: இந்தியாவில் 2011- 12ல் இருந்து 2022 - 23 வரை 17.10 கோடி பேர் பட்டினியில் இருந்து மீட்பு என உலக வங்கி அறிக்கை வெளியீடு.

உலகம்

ஏப்.2: உலக நாடுகள் அமெரிக்கப் பொருளுக்கு விதிக்கும் அதே அளவு வரியை விதிக்கும் முறையை அறிவித்தார் அதிபர் டிரம்ப்.

* அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 902 பேருடன் அமெரிக்கா முதலிடம். அடுத்து சீனா(450), இந்தியா (205) உள்ளன.

ஏப்.3: தாய்லாந்தில் நடந்த 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.

ஏப்.4: பிரதமர் மோடி மாலத்தீவு, இலங்கை பயணம்.

ஏப்.5: கம்போடியாவின் 'ரோனின்' பெருச்சாளி, கண்ணி வெடி (109), வெடிக்காத வெடிகளை (15) கண்டறிந்து கின்னஸ் சாதனை படைத்தது.

ஏப்.8: டொமினிகன் குடியரசு நாட்டில், பாடல் நிகழ்ச்சி நடந்த இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்தது. 236 பேர் பலி.

ஏப்.10: இந்திய ஜனாதிபதி முர்மு போர்ச்சுக்கல், ஸ்லோவாக்கியா பயணம்.

ஏப்.14: வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பெல்ஜியத்தில் கைது.

ஏப்.18: காங்கோவில் எம்பன்டகாவில் படகில் தீப்பற்றி மூழ்கியது. 148 பேர் பலி.

ஏப்.21: சீனா ஷாங்காய் நகரில் 'சைனா கோல்டு' நிறுவனம் சார்பில், தங்கத்தை பணமாக்கும் உலகின் முதல் ஏ.டி.எம்., திறப்பு.

ஏப்.23: காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல். சவுதி பயணத்தை பாதியில் முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி.

புதிய பாம்பன் பாலம்

ஏப். 6 : மண்டபம் - ராமேஸ்வரம் இடையே பாம்பன் கடலில் இந்தியாவின் முதல் செங்குத்து துாக்கு பாலத்தை (2.2 கி.மீ., நீளம்) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கடல் காவலன்

ஏப்.28: இந்திய கப்பல் படைக்கு பிரான்சிடம் இருந்து ரூ.64 ஆயிரம் கோடிக்கு 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம்.

இளைய மடாதிபதி

ஏப். 30: காஞ்சி சங்கரமடத்தின் இளைய மடாதிபதியானார் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

ரயிலில் ஏ.டி.எம்., அறிமுகம்

ஏப். 17 : இந்தியாவில் முதன்முறையாக மும்பை - மான்மாட் ரயிலில் ஏ.டி.எம்., நிறுவப்பட்டது.



டாப் 4


* ஏப். 4: தமிழக அரசு 2022 பிப். 5ல் நிறைவேற்றிய 'நீட்' விலக்கு மசோதாவை ஜனாதிபதி முர்மு நிராகரித்தார்.

* ஏப். 5: வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.

* ஏப். 28: மே 7, ௨௦௨௧ல் பதவியேற்ற தமிழக அமைச்சரவை ஏழாவது முறையாக மாற்றம். செந்தில் பாலாஜி, பொன்முடி நீக்கம். மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சர்.

* ஏப். 30: மக்கள்தொகையுடன் ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us